சிங்கப்பூர் MRT ரயில் சேவையில் அடுத்த மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் வரவிருக்கும் மாற்றம்!!

சிங்கப்பூர் MRT ரயில் சேவையில் அடுத்த மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் வரவிருக்கும் மாற்றம்!!

சிங்கப்பூர் MRT சர்க்கிள் லைன் ஆறாவது கட்டப் பணிகள் நடைபெற்று வருவதால் சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் சர்க்கிள் லைனில் ஒரு சில நேர மாற்றங்களை அறிவித்துள்ளது.

வட்டப்பாதையில் ஆறாவது கட்டத்தை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் சிங்கப்பூர் நில போக்குவரத்து ஆணையம் போக்குவரத்து நிறுவனமான SMRT உடன் இணைந்து. அடுத்த மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூலை 30-ம் தேதி வரை வட்டப்பாதையில் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை இரவு 11 மணிக்கு முடிவடையும்.
வியாழன் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சேவை நேரம் மாறாமல் இருக்கும். MRT நிலையங்களில் இதைப் பற்றிய தகவல்கள் ஒவ்வொரு நிலையத்திலும் கடைசி ரயிலின் நேரத்தை பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும் தகவலை தெரிந்துகொள்ள மை ட்ரான்ஸ்போர்ட் டாட் எஸ் சி மற்றும் எல் டி ஏ மற்றும் எஸ் எம் ஆர் டி யின் சமூக ஊடக பக்கங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.