வரலாற்று சாதனையை முறியடித்த சிங்கப்பூரின்திரூபன் தானா..!!!

வரலாற்று சாதனையை முறியடித்த சிங்கப்பூரின் திரூபன் தானா..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் திரூபன் தானா ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்துள்ளார்.

தென் கொரியாவில் நடந்த போட்டியில் அவர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 1:49.94 நேரத்தில் ஓடி முடித்தார்.

1987 ஆம் ஆண்டு, சின்னத்தம்பி பாண்டியன் 1:50.56 நேரத்தில் ஓடி தேசிய சாதனை படைத்தார்.

திரூபன் கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை முறியடித்தார்.

அதுதான் அவரது இலக்காக இருந்ததாக கூறினார்.

24 வயதான திரூபன், ஒரு வருடம் முன்பு 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கான பயிற்சியைத் தொடங்கினார்.

அதற்கு முன்பு, அவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்காக பயிற்சி பெற்றார்.

இந்த ஆண்டு (2025) டிசம்பரில் நடைபெறவுள்ள தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஆர்வமாக உள்ளதாக அவர் கூறினார்.

மேலும் புதன்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பெரேரா 11.41 வினாடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

சீனாவின் லியாங் சியாவோஜிங் 11.37 வினாடிகளில் ஓடி வெற்றி பெற்றார். வியட்நாமின் டிரான் தி நி யென் 11.54 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.