ஊழியரின் மரண வழக்கு..!!! SMRT நிறுவனத்திற்கு $240,000 அபராதம் விதித்த நீதிமன்றம்..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் SMRT நிறுவனத்தின் ஊழியர் உயிரிழந்ததை அடுத்து அந்த நிறுவனத்திற்கு $240,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தானது மார்ச் 23, 2020 அன்று பிஷன் கிடங்கில் ஏற்பட்டது.
இதில் 30 வயதான முகம்மது அஃபிக் செனாவி என்பவர் உயிரிழந்துள்ளார்.
பணியிடங்களில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாததால் விபத்து ஏற்பட்டதாக SMRT ஒப்புக்கொண்டது.
வாட்டர் பிரஷர் மெஷினில் இருந்து ஒரு கம்பி அறுந்து வந்து திரு அஃபிக்கை தாக்கியது.
இதனால் அவருக்கு முகம் மற்றும் மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.
SMRT நிறுவனத்தில் திரு அஃபிக் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தார்.
ஊழியர் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய குற்றத்திற்காக நிறுவனத்திற்கு ஒரு மில்லியன் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும்.
SMRT நிறுவனத்திற்கு எதிராக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட குற்றங்களைக் கருத்தில் கொண்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மூத்த மாவட்ட நீதிபதி ஓங் ஹியன் சன் தெரிவித்தார்.
மேலும் அவர் நிறுவனங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்கூட்டியே திட்டமிடுதல் அவசியம் என்று கூறினார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
