அதேபோல் மார்ச் 17ஆம் தேதி அன்று உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் 29 வயதான ஷேக் ரவி முகமது ரிசா என்ற ஆடவர் 11 வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டார்.
இந்த சம்பவம் மார்ச் 17 அன்று காலை 8 மணி அளவில் உட்லண்ட்ஸ் தெருவில் உள்ள 81 இல் நடந்ததாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து மார்ச் 17ஆம் தேதி அன்று பிற்பகல் 3:30 மணியளவில் காவல்துறையிடம் புகார் அளித்ததை அடுத்து அதிகாரிகள் விரைந்து ரிசா என்பவரை உடனடியாக கைது செய்தனர்.
மேலும் ரிசாவை சாங்கி சிறை வளாகத்தில் இருக்கும் மருத்துவ நிலையத்திற்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இது குறித்த வழக்கு விசாரணையானது ஏப்ரல் 9 ஆம் தேதி நடக்கும் என்பது தெரியவந்துள்ளது.
14 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர் சிறுமிகளை இது போன்ற மானபங்க செயல்கள் செய்பவர்களை ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும், அதனோடு பிரம்படிகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.