ஹௌகாங் HDB குடியிருப்பு பகுதியில் நடந்த துயரச் சம்பவம்..!!!

ஹௌகாங் HDB குடியிருப்பு பகுதியில் நடந்த துயரச் சம்பவம்..!!!

சிங்கப்பூர்: ஹௌகாங் பகுதியில் உள்ள ஒரு HDB அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 23 வயது பெண் ஒருவர் விழுந்து, சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வீட்டு உதவியாளர் குழுவில் உள்ள ஒரு பேஸ்புக் பயனர் வெளியிட்ட வீடியோவில், HDB தொகுதியின் தரை தளத்தில் ஒரு பெண் படுத்திருப்பது தெரிகிறது. அவருக்கு அருகில் பல போலீஸ் அதிகாரிகள் நின்று கொண்டிருப்பதும், தொலைவில் நீல நிற கூடாரம் அமைக்கப்பட்டிருப்பதும் காணப்படுகிறது.

போலீசார் கூறியதாவது, 13 ஆம் தேதி காலை 11:30 மணியளவில் ஹௌகாங் அவென்யூ 8 இல் உள்ள பிளாக் 649-ல் நடந்த சம்பவம் குறித்த தகவல் கிடைக்கப் பெற்றதாக கூறினர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், 23 வயதான பெண் ஒருவர் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் கிடந்ததாக தெரிவித்தனர்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவர்கள், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த வழக்கில் குற்றச்சாட்டு அல்லது கொலைக்கான சாத்தியம் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK