தைவானில் தேடப்படும் இரண்டு சிங்கப்பூரர்கள்..!! ஏன்..?? எதற்கு..??
சிங்கப்பூர்: கம்போடியாவில் உள்ள பிரின்ஸ் குழுமத்தின் தைவான் நடவடிக்கைகள் தொடர்பாக, இரண்டு சிங்கப்பூரர்கள் நிறுவனத்திடமிருந்து சுமார் S$37.98 மில்லியன் மேலான பணத்தை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்பட்டு,தைபே மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் அவர்கள் மீது கைது வாரண்டுகளை பிறப்பித்துள்ளது.
சீன தொழிலதிபர் சென் ஷியால் நிறுவப்பட்ட பிரின்ஸ் குழுமம் தற்போது அமெரிக்கத் தடைகளுக்குட்பட்டுள்ளது. குழுமத்தின் நான்கு துணை நிறுவனங்களின் நிதியை தனிப்பட்ட மற்றும் கம்போடியா கணக்குகளுக்கு மாற்றி, செங்ஷுவோ மற்றும் மிங்யூ நிறுவனங்களின் பணத்தை தவறாக பயன்படுத்தினர் என்று நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
நவம்பர் 2020 முதல் பிப்ரவரி 2021 வரை, நான்கு நிறுவனங்கள் சுமார் S$36.42 மில்லியன் பணத்தை அனுப்பிய பதிவுகள் உள்ளன. இதற்குப் பிறகு சிங்கப்பூர் தாய் நிறுவனம் உடனடியாக குற்றவியல் வழக்கை தாக்கல் செய்து, பணத்தை மீட்டெடுக்க சிவில் வழக்கை தொடங்கியது.
விசாரணையின் போது இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை அல்லது எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பிக்கவில்லை. நான்கு நிறுவனங்களும் வழங்கிய பணம் அனுப்பும் பதிவுகள் மற்றும் வங்கி பரிவர்த்தனை தரவுகளின் அடிப்படையில், நீதிபதி நிறுவனங்களின் கணக்குகளை ஏற்றுக்கொண்டார்.அறங்காவலராக ஜாங் காங்யாவோ நிறுவனத்தின் நிதியை தவறாகப் பயன்படுத்தியதையும், லின் தைரோங் அங்கீகாரம் இல்லாமல் நிறுவனத்தின் முத்திரையை ஒப்படைத்ததையும் கண்டறிந்தார்.