2025 ஆம் ஆண்டு: 45,000 க்கும் அதிகமானோர் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுப்பு..!!

2025 ஆம் ஆண்டு: 45,000 க்கும் அதிகமானோர் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுப்பு..!!

2024 ஆம் ஆண்டு ஒப்பிடும்போது கடந்த வருடம் 38 சதவீதம் அதிகரித்துள்ளதாக குடி நுழைவு சோதனை சாவடிகள் ஆணையம் ஆண்டு அறிக்கையில் கூறியுள்ளது.

அனுமதி மறுக்கப்பட்டவர்களில் சட்ட விரோதமாக தங்கியவர்கள் குற்றம் புரிந்தவர்களும் அடங்குவர்.

வேறு அடையாளத்துடன் சிங்கப்பூருக்குள் வந்தவர்களின் எண்ணிக்கை
2025 – 223
2024 – 233

போலி ஆவணங்களுடன் வர முயன்றவர்களின் எண்ணிக்கை
2025 – 37
2024 – 61

கடந்தாண்டு பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டதால் பயணிகள் மேலும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டதாக ஆணையம் கூறியுள்ளது.

குற்றம் புரிந்து மீண்டும் வேறொரு அடையாளத்துடன் சிங்கப்பூருக்கு வர முயன்றவர்களும் பிடிபட்டனர் இதற்கு சோதனை சாவடிகளில் உள்ள அங்கு அடையாளச் சோதனைகள் உதவியதாகவும் ஆணையம் கூறியுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பேர் வேலை அனுமதி பெற்றுள்ளதாக குறிப்பிடப்படும் மனிதவள அமைச்சின் கடிதங்களுடன் சிங்கப்பூருக்கு வந்தனர் அவ்வப்போது விரிவான சோதனை மேற்கொள்ளப்பட்டதால் கடிதங்கள் போலியான தெரியவந்ததை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK