சிங்கப்பூர் : அதிர்ஷ்டக் குலுக்கில் மில்லியன் தொகையை வென்ற இருவர்!!
சிங்கப்பூரில் TOTO அதிர்ஷ்டக் குலுக்கில் 6.08 மில்லியன் வெள்ளியை வென்ற இரண்டு பேர் அதனை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அவர்கள் ஒரு நபருக்கு சுமார் 3.04 மில்லியன் வெள்ளியை வென்றனர்.
ஜனவரி 13 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று முடிவுகள் வெளியிடப்பட்டது.
3,7,11,13,34,35 ஆகியவை வெற்றி பெற்ற எண்கள் ஆகும்.கூடுதல் எண் 17 ஆகும்.
வெற்றி பெற்றவர்கள் அதிர்ஷ்ட குலுக்கல் டிக்கெட்டுகளை ஒருவர் இணையம் மூலம் வாங்கியதாகவும், மற்றொருவர் யீஷீன் அவென்யூ 5 இல் அமைந்துள்ள Singapore pools கடையில் ஒரு வெள்ளிக்கு வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.