சீனாவில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்து விபத்து…!!! 10 பேர் பலி..!!!

சீனாவில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்து விபத்து...!!! 10 பேர் பலி..!!!

சீனாவில் 2 படகுகள் கவிழ்ந்ததில் 10 பேர் இறந்தனர்.

இந்த விபத்தில் 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (மே 4), கீசோ பகுதியில் இருக்கும் சியான்சி நகரில் உள்ள ஒரு சுற்றுலா தலத்தில் இருக்கும் ஆற்றில் படகுகள் கவிழ்ந்தன.

படகுகளில் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்தனர்.

படகுகள் எப்படி கவிழ்ந்தன என்பது தெரியவில்லை.

சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சீன அதிபர் சி சின்பிங் வலியுறுத்தினார்.