ஏழு நாட்களில் கருவளையத்தை மறையச் செய்யும் சூப்பர் டிப்ஸ்..!!

ஏழு நாட்களில் கருவளையத்தை மறையச் செய்யும் சூப்பர் டிப்ஸ்..!!

உலகமே கணினி மயமாகி வருகின்ற காலத்தில் ஆண்களும் பெண்களும் தங்களின் வேலையை செய்வதற்கு அதிக நேரம் கணினியை பயன்படுத்துகின்றனர். இப்படி கணினியை நீண்ட நேரம் உபயோகிப்பதால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும்,கண் பார்வை குறைபாடும் ஏற்படுகின்றன. பெரும்பாலானவர்களுக்கு சீக்கிரமே கருவளையம் வந்துவிடுகிறது. இப்படி கருவளையம் உள்ளவர்கள் தங்களின் முகத்தை பராமரிப்பது எப்படி என்பதை இங்கு காண்போம்.

👉 கருவளையங்களை மறைக்க கன்சீலரைப் பயன்படுத்தலாம்.

👉 தக்காளி சாறு எலுமிச்சை சாறு இரண்டையும் சம அளவு கலந்து கண்களுக்கு கீழே தடவினால் கருவளையம் குறையும்.

👉 உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து அதை சாறு எடுத்து ஒரு காட்டன் துணியில் நனைத்து கண்களுக்கு கீழே தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் கருமை நிறம் மாறும்.

👉 காபி தூள்,பால் மற்றும் தேன் கலந்து முகத்திற்கு தடவி வர கருவளையம் நீங்கி முகம் பிரகாசமடையும்.

👉 கற்றாழை ஜெல்லை கருவளையம் உள்ள இடத்தில் தடவினால் கருவளையம் குறையும்.

👉 உடலை நீரேற்றத்துடன் வைத்திருந்தால் சருமம் பொலிவடைந்து கருவளையம் மறையும்.

👉 தினமும் 7-8 மணி நேரம் தூங்குவது கருவளையங்களைக் குறைக்க உதவும்.

👉 வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த கிரீம்களை உபயோகிக்கலாம்.

👉 மன அழுத்தம் உள்ளவர்களுக்கு கருவளையம் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே யோகா,தியானம் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

7 நாட்களில் கருவளையத்தை மறையச் செய்யும் ஜெல் தயாரிப்பது எப்படி..??

தேவையான பொருட்கள்:

✨️1 தேக்கரண்டி கற்றாழை ஜெல்

✨️1/2 தேக்கரண்டி வெள்ளரிக்காய் சாறு

✨️1 சிட்டிகை மஞ்சள் தூள்

✨️1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர்

✨️1 சொட்டு பாதாம் எண்ணெய்

மேலே உள்ள அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதை தினமும் காலையிலும் மாலையிலும் கண்களுக்குக் கீழே தடவவும்.

பின்னர் 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் கருவளையம் மறையும்.