நடுவானில் நடந்த சோகம்!!

மொரிஷியஸ் இலிருந்து பிறந்து எட்டு நாளே ஆன பெண் குழந்தை இதய சிகிச்சைக்காக சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த போது நடுவானில் குழந்தைக்கு உடல்நிலை மோசமானதால் உயிரிழந்தது.இந்த துயரச் சம்பவம் திங்கட்கிழமை மாலை நடந்தது.
மொரிஷியஸில் மோனிஷ் குமார் மற்றும் பூஜா தம்பதியருக்கு மே 26 ஆம் தேதி அன்று குழந்தை லெஷ்னா பிறந்தார்.சிறப்பு இருதய சிகிச்சைக்காக சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்காக ஒரு மருத்துவ உதவியாளருடன் அந்த தம்பதி ஏர் மொரிஷியஸ் விமானத்தில் பயணித்தது.
குழந்தையின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது.ஆனால் குழந்தையின் உயிர் நடுவானில் பிரிந்தது.
விமானப் பணி பெண்கள் விமானிக்கு தகவல் தெரிவித்தனர்.விமானி உடனடியாக சென்னையில் உள்ள விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டை (ATC) தொடர்பு கொண்டு அவசர மருத்துவ சேவைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு கோரிக்கை விடுத்தார் .
விமானம் மாலை 6 மணியளவில் சென்னையில் தரையிறங்கியது.விமான நிலைய மருத்துவக் குழு விமானத்தில் ஏறி குழந்தை இறந்து விட்டதை உறுதி செய்தது.
இச்சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எழும்பூர் மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.
மொரிஷியஸீக்கு விமானம் மாலை 6.35 மணிக்கு புறப்படவிருந்தது தாமதமானது.அந்த விமானம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு மற்றும் கிருமி நீக்கம் செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர் விமானம் இரவு 7.35 மணிக்கு 288 பயணிகளுடன் புறப்பட்டது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan