உலகளாவிய பயிற்சி திட்டங்களை வலுப்படுத்தும் சிங்கப்பூர் அரசு...!!!
சிங்கப்பூர்: உலகளாவிய விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளில் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், சிங்கப்பூர் அரசு அடுத்த மூன்று ஆண்டுகளில் தோராயமாக US$4.8 மில்லியனை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) உடன் இணைந்து வளரும் நாடுகளுக்கான பயிற்சித் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், சிங்கப்பூர் 330 பெல்லோஷிப்புகள் மற்றும் 10 உதவித்தொகைகள் ஆகியவற்றை US$1.8 மில்லியன் மதிப்பில் வழங்கும்.
இதற்கு இணையாக, சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) மற்றும் அதன் உறுப்பு நாடுகளுக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் பயிற்சித் திட்டங்களை வலுப்படுத்தவும், 2026-2028காலப்பகுதியில் US$3 மில்லியன் முதலீடு செய்ய சிங்கப்பூர் உறுதியளித்துள்ளது.
இத்தகவல்கள், சிங்கப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற உலகளாவிய விமான மற்றும் கடல்சார் கருத்தரங்கில் வெளியிடப்பட்டன. இங்கு பேசிய தைவானின் போக்குவரத்து அமைச்சர் திரு. சியாவோ ஜென்சியாங், “சர்வதேச சிவில் விமான அமைப்பும், கடல்சார் அமைப்பும் உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலையில், விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை பராமரிக்கும் முக்கிய அமைப்புகள்” எனக் கூறினார்.
அத்துடன், மக்கள் மற்றும் வணிகப் போக்குவரத்துக்கான தளவாடங்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான தெளிவான கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளன என்றும், நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும், எல்லை தாண்டிய பிரச்சினைகளை கையாளும் திறனையும் இது ஊக்குவிக்கிறது எனவும் அவர் வலியுறுத்தினார்.