ஓட்டுநர்கள் அதிருப்தி..!! குறைந்தபட்ச கட்டணத்தில் ஏற்பட்ட குழப்பம்..!!

ஓட்டுநர்கள் அதிருப்தி..!! குறைந்தபட்ச கட்டணத்தில் ஏற்பட்ட குழப்பம்..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சில தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள்,தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய புதிய குறைந்தபட்ச கட்டணம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி தேசிய தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். அறிவிக்கப்பட்டபடி S$5.80 வழங்கப்பட வேண்டிய நிலையில், சில பயணங்களில் பழைய S$5.30 கட்டணமே காட்டப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய தனியார் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், இந்த முரண்பாடு குறித்து ஓட்டுநர்களிடமிருந்து தகவல்கள் கிடைத்ததாக கூறியுள்ளது. குறைந்தபட்ச கட்டண உயர்வு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், சில பயணங்களில் மாற்றம் செயல்படாதது கவலைக்குரியதாகும் என சங்கம் தெரிவித்தது.

ஓட்டுநர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து நடவடிக்கைகளும் நியாயத்துடனும் வெளிப்படைத்தன்மையுடனும் அமைய வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.ஓட்டுநர்களின் குறைகள் முழுமையாக பரிசீலிக்கப்படும் எனவும் அது உறுதி அளித்துள்ளது.

சங்கம் தொடர்புகொண்டதைத் தொடர்ந்து, கிராப் நிறுவனம் தொழில்நுட்ப சிக்கல் சரிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து ஓட்டுநர்களுக்கும் துல்லியமான இழப்பீடு வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.தேவையான திருத்தங்கள் ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்தபட்ச கட்டண உயர்வின் முழுச் செலவையும் நிறுவனம் ஏற்கும் என்றும், பயணிகளின் கட்டணத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் முன்பே அறிவிக்கப்பட்டது. ஓட்டுநர்கள் உரிய தொகையைப் பெறுவதை உறுதி செய்ய நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக சங்கம் தெரிவித்துள்ளது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK