சிங்கப்பூரில் மீண்டும் மின்சிகரெட் அலர்ட்..!! சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் அரசு...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட மின்சிகரெட்டுகள் மீண்டும் பரவல் அடைவதுடன், அதில் போதைப்பொருளான எடோமிடேட் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2024 ஜனவரி முதல் 2025 மார்ச் வரை, சுமார் $41 மில்லியன் மதிப்புடைய மின்சிகரெட்டுகள் மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 28 எடோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.