சாலையைக் கடந்த மூதாட்டி மீது கார் மோதி விபத்து..!! தப்பித்து சென்ற கார் ஓட்டுநர்..??

சாலையைக் கடந்த மூதாட்டி மீது கார் மோதி விபத்து..!! தப்பித்து சென்ற கார் ஓட்டுநர்..??

சிங்கப்பூரின் ஜாலான் புக்கிட் மேரா மற்றும் கிம் தியான் சாலை சந்திப்பில் நேற்று (ஜூலை 19) அதிகாலை 5:05 மணி அளவில் ஒரு விபத்தானது நிகழ்ந்துள்ளது.

சாலையைக் கடக்க முயன்ற 79 வயதுடைய பெண் மீது கார் வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இச்சம்பவம் குறித்த காணொளி ஒன்று இன்று (ஜூலை 20)காலை SGRV ADMIN என்ற முகநூல் பக்கம் ஒன்றில் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த பதிவில் போக்குவரத்து விளக்க பச்சையாக மாறிய பிறகு, வலதுபுறம் திரும்பிய போது சாலையைக் கடந்து சென்ற ஒரு பாதசாரி மீது வெள்ளை நிற கார் ஒன்று மோதுவது போல் தெரிகிறது.

இருப்பினும் டாஷ்கேம் காணொளியின்படி, விபத்து நடந்த நேரத்தில் பாதசாரிகளுக்கான போக்குவரத்து விளக்கு சிவப்பாக இருந்ததாக தெரிகிறது.

அந்த வெள்ளை நிற கார் அங்கிருந்து சென்று விட்டதும், அந்த பாதசாரி சாலையின் நடுவில் உள்ள தடுப்புப் பட்டையில் அசையாமல் அமர்ந்திருப்பது தெரிகிறது.

விபத்தில் காயமடைந்த அந்த பெண்மணியை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் மீட்டு, சுயநினைவுடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விபத்து ஏற்படுத்திய 58 வயதுடைய கார் ஓட்டுநர் தற்போது காவல்துறையினரால் கண்டறியப்பட்டு, விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து வருகிறார்.

சிங்கப்பூர் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK