புதிதாக சேவையை தொடங்கிய கிரேப் கேப்!

புதிதாக சேவையை தொடங்கிய கிரேப் கேப்!

சிங்கப்பூரில் கிரேப் கேப் டாக்சி ஜூலை மாதத்தில் இருந்து தனது சேவையை தொடங்குகிறது.

அது தொடக்கத்தில் 40 டாக்ஸிகளுடன் தனது சேவையை தொடங்குகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் பல டாக்ஸிகளை அதை இணைத்துக் கொள்ளும் திட்டத்தில் உள்ளது.

கிரேப் கேபின் நான்கு பேர் அமர்ந்து செல்லக்கூடிய டாக்சி பயணத்தின் தொடக்க கட்டணம் 4.60 வெள்ளி என நினைக்கப்பட்டுள்ளது.

அடுத்த 10 கிலோமீட்டர் வரும் ஒவ்வொரு 400 மீட்டர் தூரத்திற்கும் கூடுதலாக 26 காசு கட்டணம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

10 கிலோமீட்டர் மேல் ஒவ்வொரு 350 மீட்டருக்கும் 26 காசு என்றும் நிர்ணயித்துள்ளது.

மேலும் டாக்சி காத்திருக்கும் நேர கட்டணம் ஒவ்வொரு 45 வினாடிகளுக்கும் 26 காசுகள் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கட்டண நிர்ணயம் மற்ற டாக்சி கம்பெனிகளை ஒத்திருப்பது தெரிகிறது.

கிரேப் கேப் டாக்சி சேவை கிரேப் ரெண்டல் எனப்படும் வாடகை வாகன சேவை நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஆகும்.

இதில் உள்ள 40 வாகனங்களும் பெட்ரோல் மற்றும் மின்சாரம் என இரண்டிலும் இயங்கக்கூடிய டொயோட்டா பிரையஸ் வாகனங்களுடன் தனது டாக்ஸி சேவையை தொடங்கும் என ஜூன் நான்காம் தேதி அறிவிக்கப்பட்டது.

கிரேப் கேப் டாக்சி சேவை உரிமத்துக்கு விதிக்கப்பட்ட இவன் நிபந்தனைகளின் படி தனது வாகன எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்தி டாக்சி சேவைக்கான குறைந்தபட்ச வாகன தேவை அடிப்படையில் 800 வாகனங்களை கொண்டிருக்க வேண்டும்.

ஆகஸ்ட் மாதம் முதல் சேவைக்கு மேலும் இரண்டு ஹியூண்டாய் கோனா ரக பெட்ரோல் மின்சாரம் ஆகிய இரண்டிலும் இயங்கக்கூடிய வாகனத்தை ஈடுபட வைக்க போவதாக கூறியது. இந்த வாகனங்களை இயக்க வியாழக்கிழமை ஜூலை 3 முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan