சிங்கப்பூர்-தாய்லாந்து இடையே கையெழுத்தான முக்கிய ஒப்பந்தம்..!!
சிங்கப்பூர்: பிரேசிலின் பெலாம் நகரில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாட்டில் சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகள் பாரிஸ் பரோன்லி கரிமக் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் பசுமை ஆற்றல் வளர்ச்சி மற்றும் காற்று மாசு குறைப்பு நோக்கில் உருவாக்கப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் இரு நாடுகளும் இணைந்து கார்பன் வெளியீட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகும்.
சிங்கப்பூர் சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்த வளர்ச்சி அமைச்சர் மற்றும் தாய்லாந்து ஆற்றல் அமைச்சர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இதன் மூலம் இரு நாடுகளும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மரம் நடுதல் மற்றும் நிலைத்த தொழில்துறை வளர்ச்சி தொடர்பான திட்டங்களில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த உள்ளன.
இதற்குமுன் முன் அங்கீகாரம் பெற்ற கரிமக் கடன் தகுதி பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை விரைவில் செயல்படுத்த அனுமதிக்கப்பட உள்ளன.
மேலும் மாற்று நிறுவனங்களும் தாய்லாந்தில் கரிமக் கடன் ஒப்பந்தம் செய்ய சிங்கப்பூர் அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம் பசுமை ஆற்றல் முதலீடுகள், சுற்றுச்சூழல் நட்பு தொழில்கள் மற்றும் கார்பன் குறைப்புத் திட்டங்கள் தாய்லாந்தில் மேலும் விரிவடைய உள்ளன.
இந்த புதிய ஒப்பந்தம் தென்கிழக்காசியாவில் பசுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் உலகளாவிய காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒரு முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.