யீஷூனில் வீட்டுத் தாவரங்களை திருடிய நபர் மீது குற்றச்சாட்டு..!!!

சிங்கப்பூர்:யிஷூனில் வீட்டு வசதி வாரியத் தொகுதியிலிருந்து தாவரங்களைத் திருடியதாக ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
லீ டி யுவான் என அடையாளம் காணப்பட்ட 42 வயது நபரால் திருடப்பட்ட தாவரங்களின் மதிப்பு S$1,500 என மதிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றில் ஆறு போன்சாய் செடிகள். போன்சாய் செடிகளில் ஒன்றின் மதிப்பு மட்டும் 388 வெள்ளி என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
யிஷுன் அவென்யூ 11 இல் உள்ள ஒரு பிளாக்கில் இருந்து செடிகள் காணாமல் போனதாக புகார் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் அதிகாரிகள் அந்தத் தொகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் லீயை அடையாளம் கண்டனர்.
அவர் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து திருடப்பட்ட செடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஜூன் 12 ஆம் தேதி,லீ டி யுவான் ஜூன் 5 முதல் 8 ஆம் தேதி வரை அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, பிளாக் 418 யிஷுன் அவென்யூ 11 இலிருந்து 18 தொட்டிச் செடிகள், இரண்டு செடி ரேக்குகள் மற்றும் மூன்று மலர் தொட்டிகளைத் திருடியதாகக் கூறப்படும் திருட்டுக் குற்றச்சாட்டை எதிர்கொண்டார்.
லீ மீதான வழக்கு விசாரணை ஜூன் 19 ஆம் தேதி மீண்டும் தொடங்கும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan