கத்தரிக்கோலால் மிரட்டிய நபர்..!! 46 வாரங்கள் சிறை தண்டனை..!!
சிங்கப்பூர்: 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி பிற்பகல் நேரத்தில் அந்த நபர் ஒரே இடத்தில் உள்ள அவரது நண்பரின் வீட்டிற்கு அடுத்த நாள் அதிகாலை வரை மது அருந்தவும் சென்றுள்ளார். அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் அருகில் இருந்த வீட்டுக் கதவிற்கு வந்த அவர்கள் சத்தமாக பேசி அதன் காரணத்தினால் தன் குழந்தையை எழுப்பி விட்டதாக குழந்தையின் தந்தை மது அருந்திய நபரிடம் கூறியுள்ளார்.
இதனை அடுத்து மது அருந்திய வரும் அவரது நண்பரும் என்ன நடந்தது என்று விசாரிப்பதற்கு வெளியே சென்று ஒரு வார்த்தை கூட பேசாமல் அவரை இருவரும் தாக்கத் தொடங்கினர். அவரும் பதிலுக்கு அவர்களை தாக்கத் தொடங்கினார். மூவருக்கும் இடையே சண்டை அதிகமாக வந்ததால் அதைப் பார்த்த ஒருவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பிறகு சண்டையிட்டவர் அவரது சகோதரியின் வீட்டிற்கு சென்றார். காவல்துறையினர் விசாரிக்க வந்த போது சகோதரியின் வீட்டிற்கு சென்றார் அவரது மனைவியும் அவரும் சகோதரி மற்றும் மைத்துனருடன் சேர்ந்து மீண்டும் தாக்குவதற்காக மது போதையில் இருந்த நபர் வீட்டிற்கு சென்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மது போதையில் இருந்த நபர் கத்தரிக்கோலை உருவி அவர்களை மிரட்ட ஆரம்பித்த நேரத்தில் காவல் துறையினர் சமூக இடத்திலேயே கைது செய்தனர்.
காவல்துறை விசாரணையின் போது கைது செய்யப்பட்ட நபர், இது போன்ற பிரச்சனைகள் செய்வது இது முதல் முறை அல்ல என்பது தெரியவந்தது.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி காலை சுமார் 6 மணி அளவில் குற்றம் சாட்டப்பட்டவர் HDB அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் இருக்கும் ஒரு வீட்டை கடந்து சென்ற போது அவரது பக்கத்து வீட்டு வாசலில் உயர்ந்த ஒரு அழகான திரைச்சீலை தொங்கியுள்ளது அவர் தயக்கம் இன்றி திருடி சென்றுள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் இரண்டு மது பாட்டில்களை குடித்த அவர் மூன்றாவது மாடியில் இருக்கும் ஒரு குடியிருப்பில் கடந்து சென்ற போது அருகே இருந்த வீட்டுக்காரர் மீது கோபமடைந்து காலியான மாது பாட்டிலை அவர்கள் வீட்டிற்குள் வீசி எறிந்துள்ளார். இதனால் அங்கே இருந்த கண்ணாடி உடைந்து நொறுங்கியுள்ளது. அவரது இந்த செயல்கள் மற்றொரு நபரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய அளவிற்கு அமைந்துள்ளன.
இதனை அடுத்து குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, இவர் நீண்ட நாளாகவே இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது மற்றும் அடிக்கடி சிறைக்குச் சென்று வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் கத்தரிக்கோலை வைத்து மிரட்டிய குற்றத்திற்காக நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொண்ட போது நேற்று (மார்ச் 24ஆம் தேதி) குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். இதனை அடுத்த நீதிபதி அவருக்கு 46 வாரங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
50 வயதைச் சேர்ந்த குற்றவாளியான லிம் ஹான் கிம், திருட்டு, குற்றவியல் மிரட்டல், தாக்குதல் மற்றும் பிறரின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பொறுப்பற்ற நடத்தை உள்ளிட்ட பத்து குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. அரசு தரப்பு இந்த குற்றங்களில் நான்கை தொடர்ந்து விசாரித்தவரையில் மீதமுள்ள குற்றச்சாட்டுகளை தண்டனை வழங்கும் போது விசாரிப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.