தானா மேராவில் புதிய பிளாட்பார்ம் திறப்பு..!! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!

தானா மேராவில் புதிய பிளாட்பார்ம் திறப்பு..!! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் MRTயின் கிழக்கு-மேற்கு பாதையில் உள்ள தானா மேரா நிலையத்தில் புதிய கிழக்கு நோக்கிய நடைமேடை அடுத்த செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 9 அன்று திறக்கப்பட உள்ளது. இந்த மாற்றம் பாசிர் ரிஸ் மற்றும் சாங்கி விமான நிலையம் நோக்கி பயணிக்கும் பயணிகளுக்கு அதிக வசதியை வழங்கும்.

புதிய நடைமேடை திறப்புடன் இணைந்து,
தெம்பனிஸ், பிடோக் மற்றும் எக்ஸ்போ நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவை நவம்பர் 29 முதல் டிசம்பர் 8 வரை பத்து நாட்களுக்கு நிறுத்தப்பட்டிருந்தது.

நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்ததாவது, தானா மேரா MRT நிலையத்தில் தற்போது உள்ள நான்கு தளங்கள் ஆறாக அதிகரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 9 முதல், பாசிர் ரிஸ் நிலையம் நோக்கிச் செல்லும் பயணிகள் புதிய பிளாட்ஃபாரம் A-இல் இருந்து ரயிலில் ஏற வேண்டும். சாங்கி விமான நிலையம் நோக்கிச் செல்லும் பயணிகள் பரிமாற்ற நிலையம் வழியாக லிஃப்ட் அல்லது எஸ்கலேட்டர் மூலம் நடைமேடைக்குச் சென்று பயணத்தைத் தொடர வேண்டும்.

இணைப்பு திட்டம் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. அவை தண்டவாள அகற்றுதல், மீண்டும் இணைத்தல் மற்றும் சோதனை போன்றவை ஆகும்.

கிழக்கு-மேற்கு பாதை சேவையானது திட்டமிட்டபடி டிசம்பர் 9 அன்று முழுமையாக மீண்டும் தொடங்கும் என LTA அறிவித்துள்ளது.

அதிகாரிகள் தெரிவித்ததாவது, சோதனைக்காலத்தில் பிடோக் மற்றும் கிங் மான் ஆங் நிலையங்களில் சிறிய தாமதங்கள் ஏற்படக்கூடும்.குறிப்பாக நெரிசல் இல்லாத நேரங்களில் காத்திருப்பு நேரம் சுமார் 17 நிமிடங்கள் வரை நீடிக்கலாம்.

மேலும், தானா மேரா MRT நிலையத்தில் B மற்றும் C தளங்களில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் எதிர்காலத்தில் தாம்சன்–கிழக்கு பாதையுடன் இணைக்கப்படும் என்று LTA குறிப்பிட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK