சிங்கப்பூர் விமான சிப்பந்திகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பயணி!

சிங்கப்பூர் விமான சிப்பந்திகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பயணி!

சிங்கப்பூர் விமான சிப்பந்திகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பயணி!

ஸ்டீவன் ஜார்ஜ் ஹரிஷ் இவருக்கு வயது 62 இவர் லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பயணம் செய்தார்.

அப்பொழுது சிப்பந்திகளிடமும் பயணிகளிடமும் அநாகரிகமாக நடந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் விமான சிப்பந்திகளிடம் தகாத வார்த்தைகளை பேசி அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறப்பட்டது.

சிப்பந்திகளில் ஒருவரை அவர் கீழே தள்ளி விட்டதாகவும் சொல்லப்பட்டது.

அவருடைய இனவாத பேச்சும் கொலை மிரட்டலும் பயணிகளை அச்சுறுத்தியதாக தெரியவந்தது.

அவர் மீது மொத்தம் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அச்சுறுத்தியதற்கு அதிகபட்சமாக ஆறு மாதம் சிறை தண்டனையும் 5000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மிரட்டியதற்காக அதிகபட்சமாக இரண்டு ஆண்டு சிறை தண்டனை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் கொலை மிரட்டல் விடுத்ததற்கு பத்து ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

விமான சிப்பந்திகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் நூறாயிரம் வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan