மறு வேலை வாய்ப்பு வயது உயர்வு - மனிதவள அமைச்சகம் நடவடிக்கை..!!!
சிங்கப்பூரில் வெவ்வேறு சட்டப்பூர்வ ஓய்வூதியம் மற்றும் மறு வேலை வாய்ப்பு வயதுகளால் பாதிக்கப்பட்ட மூன்று வயதானவர்களுக்கான வேலை வாய்ப்பு விளைவுகளை கணக்கெடுப்பு பகுப்பாய்வு செய்தது.
2022 ஆம் ஆண்டு மறு வேலைவாய்ப்பு வயது 67 இலிருந்து 68 ஆக சமீபத்தில் அதிகரித்ததன் மூலம் வயதான தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு விகிதமும் அதிகரித்துள்ளது.
அதாவது, 0.7 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு 65 முதல் 69 வயது உடையவர்களுக்கான வேலை வாய்ப்பு விகிதம் 49.1 விழுக்காடு எட்டியது.
வயதானவர்களின் வேலைவாய்ப்பு விகிதம், 2017 ஆம் ஆண்டில் மறு வேலைவாய்ப்பு வயது உயர்த்தப்பட்டதைப் போலவே 2022 ஆம் ஆண்டில் மறு வேலைவாய்ப்பு வயது உயர்த்தப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் மீண்டும் வேலை வாய்ப்பு வயது படிப்படியாக உயர்த்துவதற்கான நடவடிக்கை குறித்து இன்னும் கூறவில்லை என்பதை மனிதவள அமைச்சகத்தின் விசாரணை கண்டறிந்துள்ளது.
வயதான தொழிலாளர்களின் ஓய்வூதிய முடிவுகள் அவர்களின் ஓய்வு பெறும் வயதை காட்டிலும் மீண்டும் பணியில் சேரும் வயதை கரத்தில் கொண்டுதான் இருப்பதாக ஆய்வுகள் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இது மறு வேலைவாய்ப்பு வயதை உயர்த்தும் கொள்கை எனவும் குறைந்த வரும் வருமானத்தை காட்டவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளது.
அடுத்த ஆண்டு முதல் நமது நாட்டின் சட்டப்பூர்வ ஓய்வு மற்றும் மர வேலை வாய்ப்பு வயது முறையில் 64 மற்றும் 69 ஆக உயர்த்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.