சிங்கப்பூரில் சாலை கட்டணங்கள் உயர்வு..!!

சிங்கப்பூரில் சாலை கட்டணங்கள் உயர்வு..!!

சிங்கப்பூரில் உள்ள மின்னியல் சாலை கட்டணங்கள் நான்கு இடங்களில் உயர உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று (மார்ச் 12) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எப்போது முதல் கட்டணங்கள் உயரும்?
மார்ச் 23ஆம் தேதியிலிருந்து மின்னியல் சாலை கட்டணங்கள் உயரும்.

எந்தெந்த இடங்களில்?
ஜூரோங் டவுன் ஹால் நகரை நோக்கி உள்ள ஆயர் ராஜா விரைவுச் சாலையில் இருக்கும் மூன்று இடங்களிலும் மின்னியல் கட்டணங்கள் அதிகரிக்கும்.

9 to 9:30 – $3
9.30 to 10 -$2 என்ற கட்டணங்களை வாகன ஓட்டுனர்கள் செலுத்த வேண்டும்.

ஆயர் ராஜா விரைவு சாலை: மாலை 6:30 to 7 – $3, மத்திய விரைவு சாலை: மாலை 5:30 to 6-$4 போன்ற வகையில் கட்டணம் செலுத்த வேண்டும்.

மத்திய விரைவுச் சாலைகளின் குறிப்பிட்ட சில பகுதிகளில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளதாக இந்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் தெரிய வந்தது என்று ஆணையம் கூறியுள்ளது.

பிற இடங்களில் உள்ள மின்னியல் கட்டிடங்களில் எந்த மாற்றமும் இல்லை மேலும் வாகன ஓட்டுனர்கள் தங்கள் பயணங்களை நன்கு திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

கோவிட் 19 காலை நேரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அதிரடி திட்டத்தின் போது ஆர்ச்சர்ட் சாலையில் மின்னியல் கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK