பாப்-அப் கடையில் விற்பனை அமோகம்..!!! நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் டாப் பொம்மை பிராண்டான பாப் மார்ட்டின் பிரபலமான கதாபாத்திரமான லாபுபு, இன்று (28 ஆம் தேதி) காலை லாபுபுவின் புதிய தயாரிப்புகள் கொண்ட பொம்மைகளை அறிமுகப்படுத்தியது.
இதனால் பாப் மார்ட்டில் விடியற்காலையில் இருந்தே பொம்மைகளை வாங்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
இது குறித்து சியாவோஹோங்ஷு என்ற பயனர் அளித்த நேர்காணலில், ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள மாண்டரின் கேலரியில் உள்ள பாப்-அப் கடையில் கூட்டம் குவிந்ததால் தான் காலை 6:10 மணிக்கு வந்து 28 என்ற எண்ணைப் பெற்றதாகக் கூறினார்.
மேலும் அங்கு சுமார் 200 பேர் இருந்ததாகவும், ஆனால் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்ட பிறகு, கூட்டம் கணிசமாகக் குறைந்ததாக அவர் கூறினார்.
சிலர் காலை 5:30 மணியில் இருந்தே வரிசையில் காத்திருந்ததாக கூறினர்.
லாபுபுவின் புதிய “தி மான்ஸ்டர்ஸ் வேக்கி மார்ட்” என்ற தொடர்வரிசையில் பொம்மைகள் வெளியாகியுள்ளது. இது கடைகளின் அலமாரிகளில் வரிசையாக வைக்கப்பட்டு ரசிகர்களை வெகுவாக ஈர்க்கிறது.
மேலும் லாபுபு பல்வேறு சிற்றுண்டி கதாபாத்திரகளான உடனடி நூடுல்ஸ், வறுத்த இறால், அரிசி உருண்டைகள், பால் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற வடிவங்களில் கிடைக்கிறது.
மேலும் இதில் கூடுதலாக blind box கதாநாயகனைத் தவிர, “வறுத்த இறால்” வடிவ இயர்போன் கவர்கள் மற்றும் உருளைக்கிழங்கு சிப் வடிவ தலையணைகள் கருப்பொருள் சார்ந்த புறப் பொருட்களும் தளத்தில் விற்கப்பட்டன.
இது பல ரசிகர்களை தளத்தைப் பார்வையிடவும் ஷாப்பிங் செய்யவும் ஈர்த்தது.
மேலும் பொருட்களை வாங்கிய பலர் பின்னர் Carousell மற்றும் Xiaohongshu போன்ற தளங்களில் அவற்றை மறுவிற்பனை செய்தது கவனிக்கப்பட்டுள்ளது.