இளைஞர்கள் புகைபிடிப்பைத் தடுக்க தீவிர ஆலோசனை..!!

இளைஞர்கள் புகைபிடிப்பைத் தடுக்க தீவிர ஆலோசனை..!!

சிங்கப்பூர்: டிஜிட்டல் மேம்பாடு, தகவல் மற்றும் சுகாதாரத் துறை இணையமைச்சர் ரஹாயு மஸாம், சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையைத் தடை செய்வது குறித்து சுகாதார அமைச்சகம் தொடர்ந்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இன்று(26.02.26) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், இளைஞர்களிடையே சுவையூட்டப்பட்ட சிகரெட்டுகளின் ஈர்ப்பை கட்டுப்படுத்த முழுமையான தடை விதிப்பது மற்றும் புகையிலை வரியை மேலும் உயர்த்துவது போன்ற நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக கூறினார்.

புகைபிடிப்பு விகிதத்தை குறைப்பது அரசின் முக்கிய இலக்காக இருப்பதாகவும், அதற்கான கட்டுப்பாட்டு கொள்கைகள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் தடை அல்லது வரி உயர்வு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பதையும் அவர் மறுக்கவில்லை.

உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் சிகரெட்டுகளில் கணிசமான பகுதி மெந்தால் மற்றும் பிற சுவையூட்டங்களுடன் உள்ளன. புதினா அல்லது பழச் சுவைகள் புகையிலையின் இயல்பான சுவையை மறைப்பதால், முதன்முறையாக புகைபிடிக்கத் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என சர்வதேச ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதனால், சுவையூட்டப்பட்ட சிகரெட்டுகளின் விற்பனையைத் தடை செய்ய வேண்டுமா என்பது குறித்து அமைச்சகம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK