சிங்கப்பூர் – சீனா இடையிலான உறவு..!! 35 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டம்.!!!

சிங்கப்பூர் - சீனா இடையிலான உறவு..!! 35 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டம்.!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் – சீனா நாடுகளுக்கு இடையிலான ஒற்றுமை உணர்வு இந்த ஆண்டுடன் (2025) 35 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது.

சிங்கப்பூர் பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சர் டான் கோக் மெங், இந்த ஒற்றுமை உறவை குறித்து கூறியுள்ளார். இந்த உறவானது ஒற்றுமையை ஊக்குவிக்கவும் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தவும் இருக்கும் என்றார்.

இன்றைய உலகில் பெரிய சக்திகள் விதிகள மீறி அதிக அளவில் கைவிட்டாலும் சிறிய நாடுகள் சுயநலமாக சிந்திக்கும் தன்னை உடையதாக இருந்தாலும் இந்த ஒற்றுமை உணர்வானது மிகவும் முக்கியமாக வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த அற்புதமான உறவுகள் நிறுவப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை பற்றி இளைஞர் பரிமாற்ற உரையாடல் கூட்டத்தில் சென் குவோமிங் உரையாற்றியுள்ளார்.

இந்த உறவை எடுத்துக்காட்டாக எடுத்து பிற நாடுகளும் இதை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பும், வலிமையும் கூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்களுடைய உயர் பதவி தலைவர்கள் தொடர்ந்து எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். மேலும் இந்த பரிமாற்றத்தால் உயர்வு மட்டம், தாழ்வு மட்டம் என்பதை வேற்றுமை படுத்தாமல் அனைவரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது.

இந்த இரண்டு நாடுகளில் இருந்தும் மொத்தம் 300 இளம் தலைவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் இந்த ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan