சாலையில் வெறித்தனமாக நடந்து கொண்ட சிங்கப்பூரர் கைது..!!

ஜோகூர் சாலையில் சிங்கப்பூரர் ஒருவர் வெறித்தனமாக தனது கோபத்தை வெளிப்படுத்தியதற்காக மலேசியக் காவல்துறை அவரை கைது செய்துள்ளது.
ஜோகூர் பாரு வடக்கு காவல் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் ஜூன் 8 ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு 40 வயதுடைய அந்த நபரைக் கைது செய்தனர்.
அவரிடமிருந்து பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக ஜோகூர் பாரு வடக்கு காவல்துறைத் தலைவர் பல்வீர் சிங் மகேந்தர் சிங் தெரிவித்தார்.
ஜூன் 7 ஆம் தேதி நடந்த அச்சம்பவம் குறித்து 31 வயதான மலேசிய நபர் காவல்துறைக்கு புகார் அளித்ததாக உதவி ஆணையர் பல்வீர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட டொயோட்டா ஆல்டிஸ் காரில் வந்த ஒருவர் தன்னை நோக்கி ஹாரன் அடித்ததாக அந்த நபர் கூறினார்.
தாமான் துன் ஆமினா பகுதியில் தனது BMW கார் வழியை மறைத்ததால் அந்த நபர் அதிருப்தி அடைந்ததாக தெரிவித்தார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் புகார்தாரரின் காரை உதைத்து சேதப்படுத்தியதாக நம்பப்படுகிறது.
இதனால் புகார்தாரருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
அந்த சிங்கப்பூரரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவருக்கு முந்தைய குற்றப் பின்னணி எதுவும் இல்லை என்பது தெரியவந்ததாக உதவி ஆணையர் பல்வீர் தெரிவித்தார்.
அந்த நபர் இன்று( ஜூன் 9) ஜோகூர் பாருவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan