சிங்டெல் நிறுவனம் - காலாண்டு முடிவு அறிவிப்பு..!!!
சிங்கப்பூரில் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான சிங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப காலாண்டு முடிவுகளை இன்று (ஆகஸ்ட் 13 ஆம் தேதி) அறிவித்துள்ளது.
கடந்த காலாண்டில் அதன் நிகர லாபம் ஆண்டிற்கு ஆண்டு 14% அதிகரித்து தற்போது $686 மில்லியனாக உயர்ந்துள்ளதாக குழு அறிவித்துள்ளது.
இதற்கு காரணம் அதன் ஆதஸ்திரேலிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஆப்டஸின் வலுவான செயல்திறன் ஆகும் என தெரிவித்துள்ளது.
திண்டலின் மேம்பட்ட செயல் திறன் முக்கிய சந்ததிகளை தொலைத்தொடர்பு செய்திகளுக்கான விலை உயர்வுகளையும் பாரதி ஏர்டெல் தலைமையிலான பிராந்திய கூட்டாளிகளின் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டுகிறது.
இந்தியா மற்றும் தெற்காசியாவில் இருந்து வரிக்கு பிந்தைய பங்களிப்பு காலாண்டு இருமடங்கிற்கு அதிகமாக உள்ளது.
தொடர்ந்து நீங்களும் பொருளாதார நிச்சயம் மாற்ற தன்மைகள் மற்றும் நாணய ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும் முதல் காலாண்டு வலுவான முடிவுகளை நாங்கள் அடைந்துள்ளோம் என்று சிங்டெல் தலைமை நிர்வாக அதிகாரி யுயென் குவான் மூன் கூறினார்.
இந்தியாவின் தொடர்புடைய நிறுவனமான பாரதி ஏர்டெல்லில் அதன் பங்குகளில் ஒரு பகுதியை விற்பனை செய்ததன் மூலம் தாய்லாந்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களான இன்டச் ஹோல்டிங்ஸ் மற்றும் கல்ஃப் எனர்ஜி டெவலப்மெண்ட் இணைப்பிலிருந்து 2.2 பில்லியன் லாபத்தை பெற்றதன் மூலம் நிகர லாபம் 2.88 பில்லியனை எட்டி உள்ளது.