தகவல் கிடைத்ததை அடுத்து தற்காப்பு படையினர் சமூக இடத்திற்கு விரைந்து சென்ற தண்ணீர் குழாய் மூலம் தீயை அணைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
மேலும் இது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) இன்று(மார்ச் 10) பிற்பகல் 3 மணி மத்திய விரைவுச் சாலையை கடந்து செல்லும் தாம்சன் சாலைக்கு அருகே ஆங் மோ கியோ அவன்யூ 1 இல் விபத்து ஏற்பட்டதையும், இதன் மூலமாக பிஷான் ஆங் மோ கியோ அவன்யூ 1 சாலை மூடப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.