சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் நோயை கண்டறியும் கதிரியக்கவியலில் சம்பளத்துடன் படித்து பட்டம் பெற்ற பிறகு இவர் உள்ளூர் மருத்துவமனையில் நான்கு வருடங்கள் பணியாற்ற வேண்டிய சூழல் இருந்தது.
ஆனால் தனது குத்துச்சண்டை இலட்சியத்தை அடைவதற்காக முழு நேர மருத்துவமனை வேலை அனுமதிக்காது என கருத்தில் கொண்டு நான்கு ஆண்டுகளில் பெற்ற $1,30,000 உதவித்தொகையை திரும்ப கொடுக்க இவர் முடிவு செய்துள்ளார்.
2019-ல் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் முதல் முறையாக பங்கேற்ற தேசிய குத்துச்சண்டை வீரர் தனிஷா என்ற பெருமையை பெற்றுள்ளார். கால் இறுதி சுற்று வரை முன்னேறிய இவர் வெற்றியடையும் வாய்ப்பை இழந்தார்.
தற்போது இந்த ஆண்டு நடைபெறும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கு பெறுவதற்கு தனது முழு முனைப்பையும் வெளிக்காட்டி தயாராகி கொண்டு வருகிறார்.