அதிர்ச்சி..!! சிங்கப்பூரில் இரு மலேசியர்கள் கைது..!! ஏன்..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மலேசிய அதிகாரிகளைப் போல நடித்து பணமோசடி செய்ததாக இரண்டு மலேசிய ஆண்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஒரு நபர், வங்கி ஊழியர் என்று கூறிய ஒருவரிடமிருந்து கிரெடிட் கார்டு தொடர்பான அழைப்பு பெற்றார். பின்னர் அந்த அழைப்பு “சட்ட அமைச்சகம்” மற்றும் “நாணய ஆணையம்” எனப் போலியாகக் கூறிய மற்ற நபர்களிடம் மாற்றப்பட்டது. அவர்கள், பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறி அவரை ஏமாற்றினர்.
வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்ட போலி ஆவணங்களை நம்பிய பாதிக்கப்பட்டவர், தன் கணக்கிலிருந்து பணத்தை மாற்றி, முஸ்தபா மையத்தில் S$4,12,000 மதிப்புள்ள தங்க நகைகள் வாங்கி அடையாளம் தெரியாத ஒருவரிடம் ஒப்படைத்தார்.
பின்னர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர் புகார் அளித்தார். விசாரணையில் 38 வயது நபர் மற்றும் 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டனர். இருவரும் எல்லைத் தாண்டிய மோசடி கும்பலுடன் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் $5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
போலீசார், மலேசியர்கள் மோசடி கும்பல்களுக்கு உதவுவதற்காக நாட்டுக்குள் நுழைவது அதிகரித்து வருவதாகவும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.