சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று நிலவரம்?

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் COVID-19 பரவல் குறைந்து வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
வாராந்திர தொற்று எண்ணிக்கை சுமார் 15,000 ஆகக் குறைந்துள்ளது.
சமீபத்திய தரவுகள் ஊக்கமளிப்பதாக கூறிய அமைச்சர் ஓங்,இது கோவிட்-19 உடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் குறைவைச் சுட்டிக் காட்டுவதாக கூறினார்.
ஒரு நாளைக்கு சுமார் 118 பேர் தொற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று சனிக்கிழமை (ஜூன் 14) ஒரு பேஸ்புக் பதிவில் அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் கோவிட்-19 அலை அதிகரிக்கத் தொடங்கியபோது, வாராந்திர தொற்று எண்ணிக்கை கிட்டத்தட்ட 26,400 ஆக இருந்தது. ஒரு நாளைக்கு தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 174 ஆக இருந்தது.
தற்போதைய அலையில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
COVID-19 தொற்றுநோயைக் கையாள்வதில் நமது சுகாதார அமைப்பு வலுவான மீள்தன்மையை வளர்த்துக் கொண்டுள்ளது என்பதை இது காட்டுகிறது” என்று திரு ஓங் தனது பதிவில் கூறினார்.
இருப்பினும், புதிய தொற்றுகள் அல்லது கோவிட்-19 இன் புதிய அலைகளை எதிர்கொள்ள சிங்கப்பூரர்கள் தொடர்ந்து தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan