சருமத்தை இளமையான தோற்றத்துடன் வைத்திருக்க உதவும் டிப்ஸ்..!!
நம் தோலில் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்து முதுமைத் தோற்றம் ஏற்பட்டுள்ளதை அறியலாம்.முதுமைத் தோற்றம் 40 வயதிற்குப் பிறகுதான் தெரிய ஆரம்பிக்கிறது.ஆனால் தற்காலத்தில் பலர் 30 வயதிற்கு முன்பே முதுமைத் தோற்றத்தை அடைகிறார்கள்.
தோல் சுருக்கங்கள், முடி நரைத்தல் ஆகியவை முதுமையின் ஆரம்ப அறிகுறிகளாகும்,மேலும் மெல்லிய கோடுகள் மற்றும் சரும புள்ளிகள் போன்றவை வயதானதற்கான அறிகுறிகளாகும். முதுமை என்பது இயற்கையான ஒன்று.
பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக முதுமை பருவத்தை அடைவோம்..இருப்பினும், இளம் வயதிலேயே வயதான தோற்றம் ஏற்பட்டால், அதை அலட்சியம் செய்யக்கூடாது, நிவர்த்தி செய்ய வேண்டும்.
இளம் வயதிலேயே வயதான தோற்றம் ஏற்படுவதற்கான காரணங்கள்:
✨️சுற்றுச்சூழல் மாசுபாடு ✨️ மனச்சோர்வு ✨️தூக்கமின்மை ✨️உடல் பருமன் ✨️ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ✨️இரசாயன அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துதல்
👉 மன அழுத்தம் மற்றும் மன சோர்வை தவிர்க்க தியானம் மற்றும் யோகா செய்யுங்கள்.
உங்களுக்காக நேரத்தை ஒதுக்குங்கள் மற்றும் நீங்கள் விரும்பும் விஷயங்களை செய்து மகிழுங்கள். உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்து ஆரோக்கியமான உணவைப் பின்பற்ற வேண்டும்.