முதலையை சிலை என்று நினைத்து அருகில் சென்ற வாலிபருக்கு நடந்த விபரீதம்..!!!

முதலையை சிலை என்று நினைத்து அருகில் சென்ற வாலிபருக்கு நடந்த விபரீதம்..!!!

பிலிப்பைன்ஸில் உள்ள மிருகக்காட்சிசாலையில் சுற்றுலா பயணி ஒருவர் முதலையிடம் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலையை சிலை என்று நினைத்த 29 வயது சுற்றுலாப் பயணி புகைப்படம் எடுப்பதற்காக அப்பகுதிக்குள் நுழைந்தார்.

அப்போது லாலே என்ற பெண் முதலை அவரது கையை கவ்விய போது பார்வையாளர்கள் அலறத் தொடங்கினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணி உதவி கேட்டு அழைத்தார்.

அதைப் பார்த்த மிருகக்காட்சிசாலையின் ஊழியர் ஒருவர் முதலையை கான்கிரீட் துண்டை வைத்து  அடித்தார்.

அது உடனடியாக தனது பிடியை விட்டது.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு கை மற்றும் தொடை பகுதியில் 50க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.