வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த தோனி…!!!

வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த தோனி...!!!

கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதின.

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரகானே 48, மனிஷ் பாண்டே 36*, ரசல் 38 ரன்கள் எடுத்தனர்.

அதன் பிறகு விளையாடிய சிஎஸ்கே அணியில் நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்ததாக உர்வில் பட்டேல் அறிமுக போட்டியிலேயே 11 பந்துகளுக்கு 31 ரன்கள் எடுத்தார்.ஆனால் அவரைத் தவிர்த்து கான்வே, ஆயுஷ் மாத்ரே, ஜடேஜா உள்ளிட்ட மற்ற வீரர்கள் பெரிய ரன்களை எடுக்கத் தவறியதால் 60/5 என ஆரம்பத்திலேயே சென்னை தடுமாறியது. இதனால் சென்னை அணி 6 ஓவர்களில் 65 ரன்கள் எடுக்க போராடியது.

வெற்றி கடினமாக இருந்த நிலையில், இளம் ஹீரோ டெவால்ட் பிரவிஸ் அற்புதமாக விளையாடி 25 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து வெற்றியை எளிதாக்கினார்.

இதன் காரணமாக, சென்னை அணி 20வது ஓவரில் 183 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. தோனி இறுதி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பெறச் செய்தார். இந்த சீசனில் மூன்றாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டிக்குப் பிறகு வர்ணனையாளர்,”சில போட்டிகளுக்குப் பிறகு நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள்.. இதைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு தோனி சிரித்துக் கொண்டே, “சில போட்டிகளுக்குப் பிறகா? இந்த சீசனில் இது எங்கள் மூன்றாவது வெற்றி” என்று பதிலளித்தார்.
“வெற்றி பெறுவது எப்போதும் ஒரு நல்ல உணர்வு தான் ” என்று பதிலளித்தார்.

மேலும் 43 வயதாகும் தோனி, சரிவர பேட்டிங் செய்ய முடியாத காரணத்தால், சிஎஸ்கே அணியின் கடைசி லீக் ஆட்டத்தில் தனது ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.