சிங்கப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!

சிங்கப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!

சிங்கப்பூர்: கடந்த ஆண்டு(2025) ஜூன் 7 ஆம் தேதி மாலை நேரத்தில் சிங்கப்பூரிலிருந்து தைபே செல்லும் ஸ்கூட் விமானம் TR 876 இல் பிரதிவாதி ஏற தயாராகி கொண்டிருந்தார்.

சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 இல் உள்ள காத்திருப்பு அறையில் ஒரு ஸ்கூட் போயிங் ட்ரீம் லைனர் விமானத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அன்று இரவு சுமார் 11:55 மணி அளவில் அவர் அந்த புகைப்படத்தை தனது instagram ஸ்டோரியில் பதிவேற்றம் செய்து “நான் இந்த விமானத்தை வெடிக்கச் செய்ய போகிறேன்” என்று எழுதி இருந்தார்.

அந்த கணக்கிற்கு மொத்தம் 71 பாலோவர்ஸ்கள் உள்ளனர். அந்தப் பதிவை பார்த்த பிறகு பிரதிவாதியின் நண்பர் அவருக்கு தனிப்பட்ட செய்தியை அனுப்பியுள்ளார் அதற்கு பிரதிவாதி இது ஒரு தானியங்கி பதில் டான் ஷி கை, ரைக்ஸ் விமானத்தை வெற்றிகரமாக அழித்துவிட்டது இனி உங்களை தொடர்பு கொள்ள முடியாது என்று பதிலளித்துள்ளார்.

அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை தெரிவிப்பதற்காக அது ஒரு நகைச்சுவையாக சொல்லப்பட்டது என்று பிரதிவாதி பின்பு கூறியுள்ளார். ஜூன் 8 2025 அன்று அதிகாலை 1 மணி அளவில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இருக்கின்ற மாதிரி இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

மணிக்கு இடையில் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட அனைத்து ஸ்கூட் போயிங் 787 ட்ரீம் லைனர் விமானங்களையும் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தினர்.

அதிகாலை 1.30 மணிக்கு சீனாவின் தியான்ஜினுக்கு செல்லவிருந்த TR138, அதிகாலை 1:45 மணிக்கு சீனாவின் கிங்டாவோவுக்கு செல்லவிருந்த TR720 உட்பட மூன்று விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று விமானங்களும் இறுதியாக அதிகாலை 3 மணி அளவில் புறப்படும் படி மாற்றியமைக்கப்பட்டது இதன் விளைவாக ஸ்கூட் நிறுவனத்திற்கு $1,946 இழப்பு ஏற்பட்டது.

பிரதிவாதியை 2025 ஜூன் 11 அன்று தைரியிலிருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்த பது காவல்துறையினர் கைது செய்தனர் பின்னர் அவர் கூட்டு நிறுவனத்திற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கினார்.

இது குறித்த துணை அரசு வழக்கறிஞர் கூறியதாவது: தினம்தோறும் ஏராளமான உள்ளூர் மக்களுக்கும் பயணிகளுக்கும் சேவை செய்யும் சாங்கி விமான நிலையம் ஒரு முக்கிய உள் கட்டமைப்பு என்பதால் இந்த வழக்கு ஒரு தடுப்பாக அமைய வேண்டும்.

20 வயதான ரைக்ஸ் டான் ஷி காய், இன்று (ஜூன் 4) காலை மாநில நீதிமன்றங்களில் தவறான மற்றும் தீங்கு விளைவிக்க கூடிய தகவல்களை பரப்பிய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

தண்டனை குறைப்பு மற்றும் தண்டனை விதிப்பு நடவடிக்கைகளுக்காக இந்த வழக்கு பின்னர் ஒரு தேதியில் மீண்டும் விசாரணை செய்யப்படும்.

சட்டத்தின் படி தவறான மற்றும் தீங்கு விளைவிக்கும் தகவல்களை பரப்பியதாக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பிரதிவாதிக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது $50,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK