அதிர்ச்சி..!! அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்குப் புற்றுநோய்…!!!

அதிர்ச்சி..!! அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்குப் புற்றுநோய்...!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர் புரோஸ்டேட் எனும் ஆண் சுரப்பிப் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை (மே 16) 82 வயதான
திரு.பைடனுக்கு புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

ஜோ பைடனும் அவரது குடும்பத்தினரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

புற்றுநோய் தீவிரமானது என்றாலும், அதைக் கட்டுப்படுத்த முடியும் என்று திரு. பைடனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

திரு. பைடன் அமெரிக்காவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என்று ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் கூறினார்.

திரு. டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வாழ்த்தினர்.