பாதுகாப்பான முறையில் இரவு விடுதி செயல்பட கூடுதல் நடவடிக்கை..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் இரவு விடுதிகளில் குற்றங்கள் குறைந்துள்ளதாக சிங்கப்பூர் காவல் படை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அநாகரீகமான தாக்குதல் வழக்குகள் 34 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளன.
இரவு விடுதிகளில் ஏற்படும் சண்டைகள் 14 லிருந்து 12 ஆகக் குறைந்துள்ளன.
பாதுகாப்பான முறையில் இரவு விடுதி செயல்படுவதற்காக இந்த ஆண்டு காவல்துறையினரால் தொடங்கப்பட்ட இயக்கத்தில் 200 க்கும் மேற்பட்ட இரவு விடுதிகள் பங்கேற்கின்றன.
இதில் பதட்டமான சூழ்நிலைகளில் நிதானமாக இருப்பது ,எல்லைகளை மதித்து நடப்பது போன்ற வீடியோக்களும் ஒளிபரப்பப்படுகின்றன.
அதிகமாக மது அருந்திய வாடிக்கையாளர்களைக் கையாள்வது குறித்து சுமார் 172 இரவு விடுதிகளைச் சேர்ந்த ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இரவு விடுதிகளில் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யும் இயக்கத்தில் சேர அதிகமான மக்களை சிங்கப்பூர் இரவு நேர வர்த்தகச் சங்கம் அழைத்துள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
