சவூதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக் கொலை!! பின்னணி என்ன?
சவூதி அரேபியாவின் தெற்கு பகுதியான பிஷா அருகே ரகியாவில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது பஷீர் (41) அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.அவர் தங்கியிருந்த இடத்தில் தனது வாகனத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டு கொன்றனர்.
அவர் 13 ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் வீட்டு ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
இச்சம்பவம் சனிக்கிழமை இரவு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.