தஞ்சோங் கடற்கரையில் தரைதட்டிய கப்பல்!!

தஞ்சோங் கடற்கரையில் தரைதட்டிய கப்பல்!!

Marco Polo 802 எனும் பெரிய சரக்குக் கப்பல் தஞ்சோங் கடற்கரையில் இன்று(ஜூன் 6) காலை தரைதட்டியது.

அந்த தகவலை சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் அளித்தது .

சேதம் ,காயம் அல்லது மாசு பற்றி எந்த புகாரும் இல்லை என்று ஆணையம் கூறியது.

சரக்கு கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவில்லை என்று செந்தோசா ஜூன் 6 (இன்று) காலை அதன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கப்பலை மீண்டும் கடலுக்கு இழுத்து செல்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும்,கப்பலை இழுத்து செல்ல இழுவைப் படகுகள் பயன்படுத்தப்படுவதாக ஆணையம் கூறியது.

கப்பல் தரைதட்டிருந்தாலும் கடற்கரை பொதுமக்களுக்காக திறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறைந்தபட்ச இடையூறு இருக்கும் வகையில் ஆணையமும் செந்தோசா நிறுவனமும் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

 

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan