வீட்டுக்குள் நிறைந்திருந்த குப்பைகள்!! தன்னார்வலர்கள் எடுத்த முயற்சி!!

வீட்டுக்குள் நிறைந்திருந்த குப்பைகள்!! தன்னார்வலர்கள் எடுத்த முயற்சி!!

சிங்கப்பூரில் ஒருவரின் வீட்டை சுத்தம் செய்ய 50 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் 13 மணி நேரம் எடுத்துக் கொண்டனர்.

ஒரு துப்புரவு தொழிலாளி பெடோக் நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள மூன்று அறைகள் கொண்ட HDB பிளாட்டில் வசிக்கிறார்.

பல ஆண்டுகளாக வேலையில்லாமல், நிதி நெருக்கடியில் இருந்தாலும் அவர் சேகரிக்கும் பழைய பொருட்களை வளங்களாக எண்ணுகிறார்.

அவர் பழைய பொருட்களை சரி செய்து விற்று வாழ்க்கையை நடத்த முடியும் என்று நம்புகிறார்.

இதனால் பல ஆண்டுகளாக அவர் குப்பையை சேகரித்து வந்துள்ளார். இந்த குப்பைகள் அவர் வீடு முழுவதும் நிறைந்து சமையலறை படுக்கையறை அனைத்திலும் குவிந்து விட்டது.

இந்த மாதம் எட்டாம் தேதி காலை 9 மணிக்கு 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் அவரது இல்லத்தில் சுத்தம் செய்யும் பணியை தொடங்கினர்.

அன்று மட்டும் 200 முதல் 300க்கும் மேற்பட்ட குப்பை பைகள் அகற்றப்பட்டன .ஆயிரக்கணக்கான கரப்பான் பூச்சிகளும் இருந்தன.

குப்பைகளை அகற்றிய பிறகு தன்னார்வலர்கள் வீட்டின் சுவர்கள் ,தரை மற்றும் கூரைகளை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்த தொடங்கினர். சுவர்களை மீண்டும் வண்ணம் தீட்டினர். மேலும் வீட்டில் furnitures மற்றும் வீட்டுக்கு தேவையான appliances ஆகியவைகளை புதிதாக மாற்றினர்.சுத்தம் செய்யும் பணி இரவு 10:45 மணி வரை நிறைவடையவில்லை. இது முழுமையாக 13 மணி நேரம் ஆனது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan