சிங்கப்பூரின் NRSI நிறுவனத்திற்கு $66 மில்லியன் மானியம்...!!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அணுசக்தி பாதுகாப்பு மற்றும் கதிர்வீச்சு மேலாண்மை குறித்த ஆராய்ச்சியை வலுப்படுத்த சிங்கப்பூர் அரசு முனைகிறது.
இதற்காக சிங்கப்பூர் அணு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு நிறுவனத்திற்கு (NRSI) சிங்கப்பூர் அரசு S$ 66 மில்லியன் மானியத்தை வழங்கியுள்ளது.
இந்த புதிய மையம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வளாகத்தில் 13,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளதுடன், ஐந்து தளங்கள் மற்றும் ஒரு அடித்தளத்தைக் கொண்டுள்ளது.
மூன்று தளங்களில் உயர் தர ஆய்வகங்கள், கணினி உருவகப்படுத்தல் ஆய்வகம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) கீழ் இயங்கும் முக்கியமான ஆய்வகங்கள் உள்ளன.
மேலும் NEA உட்பட பல தேசிய அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் NRSI, நவீனமான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் 65 செ.மீ தடிமன் கொண்ட சுவர்களுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள அடித்தள ஆய்வகங்களின் மூலம், உலகத் தரத்தில் ஆராய்ச்சி முறைகளை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த வளர்ச்சி, சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அணுசக்தி ஆய்வில் ஒரு முக்கியப் புரட்சியை குறிக்கிறது.