இரு நாட்டு ஒத்துழைப்பை வெவ்வேறு துறைகளில் அதிகரிக்க அந்த சந்திப்பு நடைபெற்றது.
சிங்கப்பூர் சார்பில் சென்ற அமைச்சர் சண்முகம் உட்பட வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தகவல் மின் இலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் தியோ, மனிதவள அமைச்சர் டான் சீ லெங், தற்காலிக போக்குவரத்து அமைச்சர் ஜேஃப்ரி சியாவ், ஆகியோரின் குழுவை துணை பிரதமர் கான் கிம் யோங் வழிநடத்தினார்.
சந்திப்பில் இரு நாட்டு வர்த்தகர்களும் இருந்ததாக திரு சண்முகம் சொன்னார்.
அப்போது சிறப்பான கலந்துரையாடலை நடத்த முடிந்ததாக அவர் கூறினார்.