சிங்கப்பூர்: பிடோக் பகுதியில் நேற்று(22.02.26) இரவு லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் கடுமையான விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தீவிர காயமடைந்து மயக்கநிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து நேற்று (21.02.26) இரவு பிடோக் தெற்கு சாலையில், ஐடா பூங்காவிற்கு அருகில் நடந்தது. விபத்துக்குப் பிறகு ஒருவர் காயமடைந்த நிலையில் அவசரமாக மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பெடோக் வடக்கு அவென்யூ 1 நோக்கி பெடோக் தெற்கு சாலையில் லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்து குறித்து நேற்று இரவு 9:10 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் உறுதிப்படுத்தினர்.
இந்த விபத்தில் 31 வயதுடைய ஆண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மயக்கநிலையில் இருந்ததாக போலீசார் உறுதிப்படுத்தினர். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை தெரிவித்ததாவது, 10 பிடோக் தெற்கு சாலை அருகே உதவி தேவைப்படுவதாக அழைப்பு கிடைத்தது.SCDF பணியாளர்கள் காயமடைந்த நபரை சிகிச்சைக்காக சாங்கி போது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.