சிங்கப்பூரில் விரைவில் நடைபெற உள்ள சர்வதேச AI மாநாடு …!!

சிங்கப்பூரில் விரைவில் நடைபெற உள்ள சர்வதேச AI மாநாடு ...!!

சிங்கப்பூர்: செயற்கை நுண்ணறிவு (AI) பாதுகாப்பை மையமாகக் கொண்டு வரும் மே மாதம் சர்வதேச மாநாட்டை நடத்த சிங்கப்பூர் தயாராகிறது. உலகம் முழுவதிலிருந்தும் நிபுணர்களை ஒன்றிணைத்து, செயற்கை நுண்ணறிவு துறையில் முக்கிய ஆராய்ச்சி திசைகள், அபாயங்கள் மற்றும் பாதுகாப்பு தரநிலைகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற உள்ளது.

புது டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் துறை அமைச்சர் ஜோசபின் தியோ கலந்து கொண்டு முக்கிய உரையாற்றினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிவேகமாக முன்னேறி வருவதால், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் அரசுக் கொள்கைகளுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

“செயற்கை நுண்ணறிவு பொதுமக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்பதில் சிங்கப்பூர் உறுதியாக உள்ளது.அதனால் தான் இந்த துறையில் முன்னணியில் செயல்படுகிறது,” என்று அவர் கூறினார். மேலும், AI அட்வான்சஸ் சயின்ஸ் நெட்வொர்க் என்ற புதிய ஆன்லைன் தளத்தை உருவாக்க உதவியதாகவும் தெரிவித்தார்.

இந்த தளம் உலகளாவிய அரசாங்கங்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை இணைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது சிங்கப்பூரின் தேசிய முன்னுரிமைகளுடனும் நீண்டகால டிஜிட்டல் மாற்ற இலக்குகளுடனும் ஒத்துப்போகிறது என அவர் குறிப்பிட்டார்.

மேலும், செயற்கை நுண்ணறிவை நம்பிக்கையுடன் ஏற்க சிங்கப்பூர் ஊழியர்கள் மற்றும் வணிகங்களுக்கு உதவ அரசாங்கம் கணிசமான முதலீடுகளை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இதுகுறித்த கூடுதல் விவரங்கள் நாடாளுமன்ற ஒதுக்கீட்டுக் குழு விவாதத்தின் போது பகிரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK