மலேசியாவில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் புதிய சட்டம்..!!

மலேசியாவில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் புதிய சட்டம்..!!

மலேசியாவில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதைத் தடுக்க புதிய சமூக சேவை சட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ், வெளிநாட்டினர்கள் உட்பட குப்பைகளை கொட்டுபவர்களுக்கு RM2,000 வரை அபராதம் மற்றும் 12 மணி நேர சமூக சேவை தண்டனை விதிக்கப்படும்.

ஓரியண்டல் டெய்லி நியூஸ் தகவலின்படி, மலேசிய வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சர் ங்கா கோர் மிங், சமூக ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு இந்த புதிய சட்டம் குறித்து மீண்டும் நினைவூட்டினார். சட்டத்தை கடுமையாக அமல்படுத்த அமலாக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நகரங்கள் சுத்தமாகவும், வசதியாகவும், ஒழுங்காகவும் இருக்க அனைவரும் பொது இடங்களை மதிக்க வேண்டும் என்றும், கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தி சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.