அக்டோபர் 15 இல் இருந்து வரும் புதிய அப்டேட்..!!!

அக்டோபர் 15 இல் இருந்து வரும் புதிய அப்டேட்..!!!

சிங்கப்பூரில் இயங்கி வரும் வங்கிகளுக்கு அக்டோபர் 15 இல் இருந்து புதிய நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது.

இந்த புதிய நடைமுறையானது சிங்கப்பூரில் உள்ள DBS, OCBC, HSBC, UOB, Citibank, Standard chartered, Maybank ஆகிய வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பொருந்தும்.

புதிய நடைமுறைகள்:
⚠️வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பாதிக்கும் ஏற்பட்ட தொகையை எடுக்கும்போது அல்லது மாற்றும்போது வங்கிகளால் தடுக்க முடியும்.


⚠️குறைந்தபட்சமாக 50,000 வெள்ளி இருக்கும் கணக்குகளுக்கு இந்த புதிய நடைமுறைகள் பொருந்தும்.

⚠️ 24 மணி நேரத்திற்குள் ஒரு முறை அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனைகள் செய்யும்போது அந்த கணக்கில் உள்ள பணத்தில் பாதிக்கு மேல் பரிமாற்றம் செய்தால் வங்கி நிர்வாகம் உடனேயே பரிவர்த்தனையை நிறுத்த வாய்ப்புள்ளது.

⚠️ இணைய வழி மூலமாக நடக்கும் பரிவர்த்தனைகள் மட்டும் இவ்வாறு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.


⚠️ தானியக்க வங்கி இயந்திரங்கள் மூலமாக நடக்கும் பணம் பரிவர்த்தனைகளுக்கு இந்த புதிய நடைமுறையானது பொருந்தாது.

புதிய நடைமுறை நடப்பிற்கு வர இருப்பதால் இணைய வங்கிய நடவடிக்கைகளில் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என சிங்கப்பூர் வாங்கிச் சங்கம் கூறியுள்ளது.

எனவே செய்ய வேண்டிய பண பரிவர்த்தனைகளை முன்பாகவே திட்டமிட்டு கொள்வது சிறந்த வழி எனவும் சங்கம் ஆலோசனை விடுத்துள்ளது.