சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சந்திர புத்தாண்டுடன் தொடர்புடைய ராசி விலங்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். இந்த ஆண்டு குதிரை ஆண்டாக இருப்பதால், செல்லப்பிராணி பொருளாதாரத்தில் மட்டுமல்ல, குதிரை சவாரி பயிற்சிக்கும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சில குதிரையேற்றப் பள்ளிகளில் முதல் இரண்டு மாதங்களில் விசாரணைகள் 50% வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திரைப்படக் காட்சிகளைப் போல பரந்த புல்வெளிகளில் சுதந்திரமாக குதிரையில் பாய்ந்து செல்ல வேண்டும் என்ற கனவு பலருக்கும் உள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, உள்ளூர் குடும்பங்களில் குதிரை சவாரி நீதானே ஆர்வம் அதிகரித்துள்ளது. குழந்தைகள் மட்டுமன்றி, பெரியவர்களும் அதிக ஆர்வத்துடன் சேர்ந்து வருகிறார்கள்.
புக்கிட் திமா குதிரையேற்ற கிளப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜெங் வெய்ஜியா கூறுகையில், “இது குதிரை ஆண்டு என்பதால் மட்டுமல்ல, சமீபத்திய ஆண்டுகளில் கிளப் கடினமாக உழைத்து உள்ளூர் சமூகத்துடன் தொடர்பு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியதும் முக்கிய காரணம் என்றார். பொதுமக்களின் ஈர்ப்பை அதிகரிக்க கிளப் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், குதிரையேற்றம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் 10% முதல் 50% வரை உயர்ந்துள்ளதாக பள்ளிகள் தெரிவித்துள்ளன. குதிரையேற்றம் என்பது மக்கள் கற்பனை செய்வது போல் அடைய முடியாதது அல்ல,அது ஒரு தீவிரமான மற்றும் தொழில்முறை செயலாகவோ அல்லது நிதானமான மற்றும் மகிழ்ச்சிகரமான அனுபவமாகவோ இருக்கலாம்.
கேலோப்பிங் ஸ்டேபிள்ஸின் இயக்குநர் தனபாலன், “பெரிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.இதேவேளை, சிங்கப்பூர் டர்ஃப் கிளப் மூடப்பட்டதையடுத்து செயல்பாட்டு இடம் குறைந்திருப்பது சவாலாக உள்ளது. எனினும், சிங்கப்பூர் குதிரையேற்றக் கூட்டமைப்பு, குதிரையேற்ற விளையாட்டின் நிலையான வளர்ச்சிக்காக பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளது.