அதிர்ச்சி..!!வாட்ஸ்அப் மூலம் இ-சிகரெட் விற்பனை செய்த இளம்பெண்..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வாட்ஸ்அப் மூலம் இ-சிகரெட்டுகளை விற்றதாக 19 வயது பெண் ஒருவர் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
அல்பீ சாய் புவோ யின் என்ற சிங்கப்பூர் பெண், புகையிலை (விளம்பரக் கட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விற்பனை) சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி, ஜேவியர் என்ற நபருக்கு மூன்று ஒருமுறை பயன்படுத்தக்கூடிய இ-சிகரெட்டுகளை விற்றதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, அக்டோபர் மாதம் வாட்ஸ்அப்பில் மின்-சிகரெட்டுகளை விளம்பரப்படுத்தியதாகவும், டிசம்பர் 19-ஆம் தேதி ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 91-இல் உள்ள அலகில்,ஆறு இ-சிகரெட்டுகள் மற்றும் ஒரு மீட்டுபயன்பாட்டுக்கான கெட்டியுடன் கூடிய மின்-சிகரெட்டை வைத்திருந்ததாகவும், அமலாக்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் அந்தப் பெண் குற்றத்தை ஒப்புக்கொள்ள தயாராக இருப்பதை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நீதிபதி அடுத்த மாதம் விசாரணை தேதியை நிர்ணயித்தார்.