கோல்களை குவித்த எதிரணிகள்..!! வாய்ப்புகளை இழந்த சிங்கப்பூர்..!!!

கோல்களை குவித்த எதிரணிகள்..!! வாய்ப்புகளை இழந்த சிங்கப்பூர்..!!!

சிங்கப்பூர்: தென்கிழக்காசிய விளையாட்டுகளின் காற்பந்துப் போட்டியில் சிங்கப்பூர் அணி தோல்வியை சந்தித்தது.

தாய்லாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சிங்கப்பூர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இதனால், A குழுவில் சிங்கப்பூர் அணி கடைசி இடத்தில் முடித்துள்ளது.

இதே குழுவில் தாய்லாந்தும் தீமோர்-லெஸ்ட்டேவும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

முதல் போட்டியிலேயே தீமோர்-லெஸ்ட்டே அணியிடம் 3-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக 2013ஆம் ஆண்டில் மட்டுமே சிங்கப்பூர் அணி அரையிறுதி சுற்று வரை முன்னேறியிருந்தது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK